Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சினிமாவை மிஞ்சும் ஆணவக் கொலை : மகளை வெட்டிக் கொன்ற தந்தை !!

சினிமாவை மிஞ்சும் ஆணவக் கொலை : மகளை வெட்டிக் கொன்ற தந்தை !!
, வெள்ளி, 28 ஜூன் 2019 (20:42 IST)
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பழமனேறுவில்  வேறு வகுப்பினரை சேர்ந்தவரை மகள் திருமணம் செய்துவிட்டாள் என்பற்காக பெற்ற மகளையே தந்தை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரமாநிலம் சித்தூரி மாவட்டத்தில் உள்ள பழமனேறு என்ற பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ஹேமலதா என்ற பெண் இருந்தார். அவர் வேறு வகுப்பைச் சேர்ந்த கேசவன் என்பவரைக் காதலித்துள்ளார்.இருவரும் திருமணம் குறித்து வீட்டாரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் பெண்ணின் வீட்டார் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன்  மகளுக்கு வேறு மாப்பிள்ளையை தேடி வந்துள்ளனர்.
 
பின்னர் கேசவனும் - ஹேமலதாவும் பெற்றோரை எதிர்த்து ஒரு வருடத்திற்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். இதனால் பெண்ணின் வீட்டர் மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளனர். 
 
இதனைத் தொடர்ந்து கேசவன், தனது மனைவி ஹேமலாதாவுடன் தனியே வீடு எடுத்து தங்கியிருந்ததாகத் தெரிறது. இந்த தம்பதியருக்கு 7 நாட்களுக்கு முன்னர் குழந்தை (பையன் ) பிறந்துள்ளது. 
 
அதனால் சமீபத்தில் தனது ஹேமலதாவை வீட்டுக்கு அழைத்துள்ளார் அவரது அப்பா! தன் அப்பா மனம் திருந்தி அழைக்கிறார் என்று கேசவன் - ஹேமலதா இருவரும் செல்ல முடிவு செய்தனர். அதற்கு ஒரு ஆட்டோவையும், பெண்ணின் அப்பா இன்று ஏற்பாடு செய்திருந்தார். இந்நிலையில் இன்று வீட்டுக்கு செல்லும் முன்பு ஹேமலதாவின் தந்தை தான் வைத்திருந்த அரிவாளால் மகளைக் கண்டந்துண்டாக வெட்டி கொலை செய்தார். மனைவி கண்முன்பே வெட்டிக்கொன்றதைப் பார்த்து தடுத்துள்ளார் கேசவன் ஆனால் ஆட்டோவில் இருந்த கும்பல் அவரைப் பிடித்துக்கொண்டதாகத் தெரிகிறது. கேசவன் லேசான காயங்களுடன் தப்பித்துக்கொண்டார்.இந்த ஆணவக்கொலை குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணி மேல் ஆசைப்பட்ட தம்பி: நடந்து முடிந்த கொடூரம்