Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பூரில் மட்டும் 98 வங்கதேசத்தினர் கைது.. இன்னும் தொடரும் தேடுதல் வேட்டை..!

Mahendran
செவ்வாய், 28 ஜனவரி 2025 (14:05 IST)
திருப்பூரில் இந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 98 வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் கொல்கத்தா வழியாக இந்தியாவிற்குள் நுழைந்து அங்கிருந்து நேராக தமிழ்நாட்டுக்கு தான் வருகிறார்கள் என்றும் குறிப்பாக திருப்பூர், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
தங்களை வட இந்தியர்கள் என்று கூறிக்கொண்டு போலியான ஆதார் அட்டை காண்பித்து வேலைக்கு சேர்ந்து வருவதாக செய்திகள் வெளியான நிலையில் கடந்த சில நாட்களாகவே காவல்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இன்று ஒரே நாளில் திருப்பூரில் உள்ள ஆடை நிறுவனத்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த 15 வங்கதேச இளைஞர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனை அடுத்து இந்த மாதத்தில் மட்டும் 98 வங்கதேசத்தவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தாக தகவல் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போல் போலி ஆதார் அட்டைகளை கொடுத்து வேலைக்கு சேர வரும் நபர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தவர்கள் என கூறி முகாமில் அடைக்கப்பட்ட 19 பேர். சொந்த நாட்டிலேயே அகதிகளா?

15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்

இந்தியா - பாகிஸ்தான் போரில் 5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.. டிரம்ப் மீண்டும் சர்ச்சை..!

கொழுந்தனுடன் கள்ளக்காதல்.. கணவனை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மனைவி.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments