Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நித்தியிடம் பெண் கேட்கும் 90ஸ் கிட்ஸ்!- எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!

நித்தியிடம் பெண் கேட்கும் 90ஸ் கிட்ஸ்!- எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!
, செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (11:17 IST)
கைலாசா என்ற தனி நாடு தொடங்கியுள்ளதாக அறிவித்த நித்தியானந்தாவுக்கு பலர் பல கோரிக்கை கடிதங்கள் அனுப்பி வரும் நிலையில் 90ஸ் கிட்ஸ் எழுதிய கடிதம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி சாமியாரான நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி வருவதாக செய்திகள் வெளியானது சில மாதங்கள் முன்பு பெரும் வைரலானது. இந்நிலையில் கைலாசாவில் கடை வைக்க, அதற்கு இதற்கு என்று பலர் அனுமதி கேட்டு நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதி வந்தனர். அவர்களுக்கு தொழில் தொடங்க வாய்ப்பு வழங்குவதாக நித்தியானந்தாவும் வீடியோ வாயிலாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 90ஸ் கிட்ஸ் எனப்படும் 1990 – 96களில் பிறந்தவர்கள் எழுதியுள்ள கடிதம் வைரலாகி வருகிறது. பொதுவாகவே 2000களில் பிறந்த 2கே கிட்ஸ் பலர் திருமணமாகி சென்று விட்ட நிலையில் 90ஸ் கிட்ஸ் இன்னமும் திருமணமாகாமல் சுற்று வருவதா சமூக வலைதளங்களில் இது ஒரு வழக்கமாகவே மாறியுள்ளது.

இதுகுறித்து நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதியுள்ள 90ஸ் கிட்ஸ் “தாங்கள் இன்னமும் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வருவதாகவும், அதனால் உங்கள் சிஷ்யைகளை எங்களுக்கு திருமணம் செய்து வைத்து, உங்கள் கைலாசா நாட்டில் ஒரு அரசு பணியும் கொடுத்து எங்கள் மனக்கவலையை தீர்க்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளனர்.

விளையாட்டாக எழுதப்பட்டுள்ள இந்த கடிதம் சமூக வலைதளங்களில் பரவி ட்ரெண்டாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மன்னாதி மன்னர்.. நம்பர் 1 முதல்வர் எடப்பாடியார்! – பாராட்டி தள்ளும் அமைச்சர்கள்!