Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பர்கர் சாப்பிட்ட 9 பேருக்கு வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி.. நாமக்கல்லில் பரபரப்பு..!

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (11:29 IST)
சேலம் மாவட்டம் நாமக்கல்லில் சமீபத்தில்  சவர்மா சாப்பிட்ட சிறுமி ஒருவர்  பரிதாபமாக உயிரிழந்த நிலையில்  இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் அதே நாமக்கல்லில் பர்கர் சாப்பிட்ட ஒன்பது பேர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
சேலம் மாவட்ட  நாமக்கல்லில் சேலம் சாலையில் உள்ள ஒரு கடையில் இளைஞர் ஒருவர் பர்கர் சாப்பிட்டார். இதனையடுத்து திடீரென அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து அதே கடையில் பர்கர் சாப்பிட்ட அடுத்தடுத்து எட்டு பேர் வாந்தி மயக்கம் அடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  அந்த கடையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சோதனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே நாமக்கல்லில் சவர்மா சாப்பிட்டு சிறுமி உயிர் உயிர் இழந்த நிலையில் தற்போது பர்கர் சாப்பிட்டு மயக்கம் அடைந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

9ஆம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்.. 9,10,11ஆம் வகுப்பு மாணவர்கள் செய்த கொடூரம்..!

No UPI, Only Cash.. கடைகளில் வைக்கப்படும் திடீர் பதாகையால் பரபரப்பு.. என்ன நடந்தது?

83 லட்சம் இறந்தவர்களின் ஆதார் அட்டை என்ன ஆச்சு? வெறும் ஒரு லட்சம் மட்டுமே நீக்கப்பட்டதா?

சாகும் போது கருணாநிதி கையை பிடித்து கெஞ்சினார் காமராஜர்: திருச்சி சிவாவின் சர்ச்சை பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments