Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

9,10, 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை

9,10, 11ம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டாம்: பள்ளிக் கல்வித்துறை
, வியாழன், 25 பிப்ரவரி 2021 (12:27 IST)
9, 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பொது தேர்வு கிடையாது என்றும் அவர்கள் அனைவரும் ஆல் பாஸ் என்றும் சில மணி நேரங்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்து இருந்தார் என்று வெளிவந்த செய்தியைப் பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டிய தேவை இல்லை என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது
 
9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் பாஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய அவசியமில்லை என்றும், இந்த மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டு பள்ளி தொடங்கும் ஜூன் அல்லது ஜூலை மாதம் வந்தால் போதும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேமுதிக விருப்ப மனு.. தேர்தலில் களமிறங்கும் கேப்டன் குடும்பம்!