Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதுமலை புலிகள் காப்பகத்தில் நாட்டின் 78 -வது சுதந்திர தினவிழா!

முதுமலை புலிகள் காப்பகத்தில் நாட்டின் 78 -வது சுதந்திர  தினவிழா!

J.Durai

, வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (17:07 IST)
தெப்பக்காடு முகாம் வளாகத்தில் துணை இயக்குனர் (பொறுப்பு) வெங்கடேஷ் பிரபு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
 
இதைத் தொடர்ந்து வனத்துறையினரின் கொடி அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அப்போது வளர்ப்பு யானைகள் தும்பிக்கைகளை உயர்த்தியபடி தேசிய கொடியை நோக்கி மரியாதை செலுத்தியது. 
 
மேலும் வளர்ப்பு யானைகள் மீது பாகன்கள் அமர்ந்திருந்தவாறு தேசியக் கொடியை உயர்த்தி பிடித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள், வனத்துறையினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
 
பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி..! கோவிலுக்கு சென்ற போது நிகழ்ந்த பரிதாபம்..!!