Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று நடந்த TNPSC தேர்வை 63,000 பேர் எழுதவில்லை.. என்ன காரணம்?

Siva
திங்கள், 16 ஜூன் 2025 (08:26 IST)
தமிழக முழுவதும் நேற்று TNPSC  குரூப் 1 தேர்வு இந்த தேர்வுக்கு விண்ணப்பம் செய்திருந்தால் 63,000  பேர் தேர்வு எழுத வரவில்லை என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 294 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 பேர் மட்டுமே பங்கேற்றனர். அதாவது, சுமார் 74.66% பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 63,000  பேர் தேர்வு எழ்த வரவில்லை.
 
துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் போன்ற முக்கிய பதவிகளுக்கான 70 காலியிடங்களை நிரப்ப ஏப்ரல் 1 அன்று அறிவிக்கப்பட்ட இந்தத் தேர்வு, 44 மையங்களில் நேற்று நடைபெற்றது.
 
நேற்று நடந்த குரூப் 1 முதல்நிலை கேள்வித்தாளில் சில சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, ஒரு கேள்வியில், "தி.மு.க. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியது" என்ற கூற்றும், அதற்கு "மக்களை தமிழர் என்ற அடையாளத்தால் தி.மு.க. ஒன்றிணைய வற்புறுத்தியது" என்ற காரணமும் கொடுக்கப்பட்டு, சரியான விடையை தேர்ந்தெடுக்க கேட்கப்பட்டிருந்தது. இந்தக் கேள்வி அரசியல் ரீதியான திணிப்பு என சமூக வலைத்தளங்களில் பலத்த கண்டனத்துக்குள்ளானது.
 
இதேபோல, மற்றொரு கேள்வியில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, முத்துசாமி பிள்ளை, ஏ.ஆர்.முதலியார், வாஞ்சி ஐயர் எனச் சாதி பெயர்களுடன் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.  
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் காபி விலை கிடுகிடு உயர்வு.. டிரம்ப் வரிவிதிப்பு தான் காரணமா?

பாகிஸ்தானோடு கொஞ்சி குலாவும் அமெரிக்கா! BLA பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு!

கை ஒரு இடத்தில்.. கால் ஒரு இடத்தில்.. மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய மருமகன்..!

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments