Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அரசு போக்குவரத்து பணிமனையில் 60 லட்சம் வரி நிலுவை!

அரசு போக்குவரத்து பணிமனையில் 60 லட்சம் வரி நிலுவை!
, வியாழன், 24 மார்ச் 2022 (10:07 IST)
சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனையின் சார்பில் சொத்து வரி, தொழில் வரி ஆகியவை மொத்தம் சுமார் ரூ.59 லட்சத்து 89 ஆயிரத்து 945 செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது.

இதனால் வரி நிலுவைத்தொகையை செலுத்த வலியுறுத்தி, நகராட்சி ஆணையாளர் ஜெயப்பிரியா மற்றும் அதிகாரிகள் நேற்று சங்கரன்கோவில் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு சென்றனர்.
 
அப்போது 2021-2022-ம் ஆண்டிற்கான சொத்துவரி பாக்கி ரூ.57 ஆயிரத்தை இன்று (வியாழக்கிழமை) செலுத்துவதாகவும், தொழில் வரியை செலுத்த கால அவகாசம் வழங்குமாறும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆம் ஆத்மி கட்சி கவுன்சிலருக்கு பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள்… அப்படி என்ன செய்தார் தெரியுமா?