Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மழை!

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (18:12 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

 
தமிழகத்தில் கோடை பருவம் தொடங்கியுள்ள நிலையில் பல பகுதிகளில் வெயில் வாட்டி வருகிறது. எனினும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்ப சலனம் உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
 
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி கன்னியாக்குமரி, நாகர்கோவில் உள்ளிட்ட தென் தமிழக பகுதிகள் மற்றும் கடற்கரை பகுதிகளிலும், வட தமிழக கடலோர பகுதிகளாக புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என கூறப்பட்ள்ளது.
 
இதனைத்தொடர்ந்து தற்போது அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 6 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன்படி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி, கோவை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பிருக்கிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments