Publish Date: Wed, 04 May 2022 (19:40 IST)
Updated Date: Wed, 04 May 2022 (19:42 IST)
ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் ஒருவருக்கு சாகும் வரை சிறை தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நெல்லை மாவட்டம் ராமயன்பட்டி என்ற பகுதியில் ஐந்தாம் வகுப்பு மாணவியை விக்னேஷ் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் இன்ரு தீர்ப்பு அளிக்கப்பட்டது
ஐந்தாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது விக்னேஷ் என்ற இளைஞருக்கு சாகும் வரை சிறை தண்டனை என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது