Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை விசாரணை கைதி மரணம்; 13 இடங்களில் காயம்! – வெளியான பிரேத பரிசோதனை அறிக்கை!

Advertiesment
Chennai
, புதன், 4 மே 2022 (19:32 IST)
சென்னை காவல் நிலையத்தில் விசாரணை கைதி உயிரிழந்த விவகாரத்தில் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது.

சென்னையில் கடந்த சில நாட்கள் முன்னதாக விசாரணைக்காக காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்ட விக்னேஷ் என்ற கைதி உயிரிழந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் தாக்கியதாலேயே விக்னேஷ் உயிரிழந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதனிடையே காவல் நிலையத்தில் இருந்து தப்பியோட முயலும் விக்னேசை போலீஸ் பிடிப்பது போன்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகின.

இந்நிலையில் தற்போது விசாரணை கைதி விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், விக்னேஷ் உடலில் 13 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

விக்னேசின் உடலில் லத்தியால் தாக்கியதால் ஏற்பட்ட காயங்கள், தலை, கண், உடலில் ரத்தம் கட்டிய காயங்கள், இடது கை, முதுகின் வலது பக்கம் காயம், வலது முன்னங்காலில் எலும்பு முறிவு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பேரறிவாளன் விடுதலை வழக்கு: இறுதி கட்டத்தை எட்டியுள்ளதா ? உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்ன சொல்கிறார்கள் ?