Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாதிப்பு குறைந்தாலும் பலி எண்ணிக்கை உயர்கிறது: இன்றைய தமிழக கொரோனா நிலவரம்

பாதிப்பு குறைந்தாலும் பலி எண்ணிக்கை உயர்கிறது: இன்றைய தமிழக கொரோனா நிலவரம்
, வெள்ளி, 7 ஆகஸ்ட் 2020 (18:12 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 5880 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2,85,024ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 5880 பேர்களில் 984 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதும், இதனையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107,109 ஆக உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் நீண்ட இடைவெளிக்கு பின் கொரோனா பாதிப்பு 1000க்கும் குறைவாக உள்ளது என்பது
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 119 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 4690 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 6488 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 2,27,575 ஆக உயர்ந்துள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கேரளா நிலச்சரிவு: ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கும் மோடி!