Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் 518 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் 518 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
, செவ்வாய், 1 ஜூன் 2021 (16:52 IST)
தமிழகத்தில் இதுவரை 518 பேர்கள் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் சற்று முன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மேலும் கருப்பு பூஞ்சை நோய் எதனால் வருகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்
 
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் கருப்பு பூஞ்சை பரிசோதனை மையத்தை இன்று அமைச்சர் மா சுப்பிரமணியம் திறந்து வைத்தார். அதில் கருப்பு பூஞ்சை குறித்த அனைத்து வகை பரிசோதனைகளையும் ஒரே இடத்தில் மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கருப்பு பூஞ்சை நோய் பற்றி ஆராய 13 மருத்துவ வல்லுனர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் இதுவரை 518 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் ரீசார்ஜ் செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி காவல்துறையில் அளித்த புகார்!