Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பையில் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை!!

Webdunia
திங்கள், 19 ஜூலை 2021 (12:08 IST)
அடுத்த 5 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

 
மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதையடுத்து மும்பையில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மூன்றே மணி நேரத்தில் 25 சென்டி மீட்டர் அளவுக்கு பெய்த மழையால் மும்பை நகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. 
 
இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக நகருக்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
அதோடு பலத்த மழை பெய்தாலும் அதை எதிர்கொள்ள மும்பை மாநகராட்சி, நிர்வாகம் முழுவீச்சில் 24 மணி நேரமும் தயாராக இருக்க வேண்டும் என உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை வீழ்த்த விஜய்யை கட்டாயம் கூட்டணிக்குள் இழுக்க வேண்டும்: அமித்ஷா கொடுத்த டாஸ்க்..!

பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் குடையுடன் செல்க.. 24 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை..!

பழிக்கு பழி.. உக்ரைன் நாட்டின் மத்தியில் வரை சென்ற ரஷ்ய படை.. ட்ரோன்கள் இடைமறித்து அழிப்பு..!

6 மாதம் கூட ஆகவில்லை.. டிரம்பை எதிர்த்து பயங்கர போராட்டம்.. வன்முறையாக மாறியதால் பரபரப்பு..!

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments