Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் 21 ஆம் தேதி வரை மழை!

தமிழகத்தில் 21 ஆம் தேதி வரை மழை!
, ஞாயிறு, 18 ஜூலை 2021 (09:45 IST)
வங்கக்கடலில் 21 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல இடங்களில் நேற்று மாலை முதல் மழை கொட்டி தீர்த்தது. 

 
இதன்படி நேற்று நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை கொட்டி தீர்த்தது. 
 
அதேபோல் சென்னையில் நேற்று நகர் முழுவதும் நல்ல மழை பெய்துள்ள நிலையில் இன்றும் நாளையும் கன மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக மாநிலத்தில் 21 ஆம் தேதி வரை பரவலாக மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை மருத்துவமனைகளில் மருத்துவர்கள் வேலை: ரூ.90 ஆயிரம் சம்பளம் என அறிவிப்பு!