Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தேர்வில் 49 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை

12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்தேர்வில் 49 ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை
, புதன், 15 மார்ச் 2023 (18:36 IST)
தமிழ்நாட்டில் இன்று நடந்த 12 ஆம் வகுப்பு ஆங்கில பாடத்தேர்வில் 49 ஆயிரம் மாணவிகள் தேர்வெழுதவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

2022-23 ஆம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் டூ பொதுத்தேர்வு  கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இந்த தேர்வை 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ-மாணவிகளும், தனித் தேர்வர்களாக 23 ஆயிரத்து 747 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 75 ஆயிரத்து 50 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த தேர்வுக்காக 3 ஆயிரத்து 225 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் தமிழகத்தில்  நேற்று முன்தினம் நடந்த  முதல் தேர்வான தமிழ் மொழி தேர்வை 50 ஆயிரத்து 674 மாணவ மாணவிகள் எழுதவில்லை என பள்ளி கல்வித்துறை தெரிவித்தது.

இந்த நிலையில், இன்று  நடைபெற்ற ஆங்கில பாடத்தேர்விற்கு 49 ஆயிரம் மாணாவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெற முடியாது. என்ற சூழலில் அவர்கள் தேர்வு எழுதவில்லை என்று கூறப்படுகிறது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிமுக - பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: செங்கோட்டையன்