Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 470 பேருக்கு கொரோனா பாதிப்பு!

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 470 பேருக்கு கொரோனா பாதிப்பு!
, ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (18:13 IST)
தமிழகத்தில் தினந்தோறும் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை தெரிவித்து வரும் தமிழக சுகாதாரத்துறை இன்று தமிழகத்தில் 470 பேர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று பரவி இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 845,120 ஆக உயர்ந்துள்ளது
 
மேலும் இன்று கொரோனாவால் பாதிப்பு அடைந்த 470 பேர்களில் 140 பேர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு 6 பேர் பலியாகியுள்ளதை அடுத்து தமிழகத்தில் பலி எண்ணிக்கை 12419 ஆக உயர்ந்துள்ளது என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று 479 பேர் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில் குணமானோர் எண்ணிக்கை 828,441 ஆக உயர்ந்துள்ளது. 
 
மேலும் தமிழகத்தில் இன்று 53323 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 164.48.958 என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழுக்கு பெருமைசேர்த்த பிரதமருக்கு நன்றி: ஓபிஎஸ் டுவீட்