Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் மழை பதிவு

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (12:25 IST)
மிக்ஜாம் புயல் இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெற  வாய்ப்புள்ளதால் அதிக கனமழை  மற்றும் காற்று இன்று இரவு வரை தொடரும் நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மிக்ஜாம் புயல் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் காற்றின் அதிகரித்து வருவதால் அனைத்து விமானங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் விமானங்களும், வேறு விமானங்களும் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றன.

இந்த மோசமான சூழலை விவரிக்க வார்த்தைகள் இல்லை என பிரதீப் ஜான் கூறியிருந்த நிலையில் சென்னையில் அதிகாலை வரை சராசரியாகக 34 செமீ மழை பதிவாகியுள்ளாதாக மாநகராட்சி கூறியது.

இந்த நிலையில், சென்னையில் 47 ஆண்டுகளில் இல்லாத அளவில் 34 செமீ மழை பதிவாகியுள்ளது.  கடந்த 201ல் பெரும் வெள்ளம் ஏற்பட்டபோது 33 செமீ மழை பெய்திருந்த நிலையில், தற்போது அதைவிட அதிக மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் உள்ள சாலைகள் வெள்ளக்காடான நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தீவிர புயலாக வலுவடைந்துள்ள மிக்ஜாம் தற்போது சென்னைக்கு 90 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணமான 40 வயது நபருடன் லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண்.. திடீரென செய்த கொலை..!

நயினார் வீட்டில் எடப்பாடியாருக்கு விருந்து.. 109 வகை மெனு! - அண்ணாமலை ஆப்செண்ட்?

பீகார்ல வீடு இருக்கவன்.. எப்படி தமிழ்நாட்டுல ஓட்டு போட முடியும்? - ப.சிதம்பரம் கேள்வி!

என்னை திட்டினாலும் திரும்ப திட்ட மாட்டேன்! ஓபிஎஸ்ஸிடம் அமைதி காக்கும் நயினார்!

முதலாம் ஆண்டு பொறியியல் வகுப்புகள் தொடங்குவது எப்போது? அண்ணா பல்கலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments