Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி திமுகவின் மோதல் சம்பவம்: 4 பேர் சஸ்பெண்ட் என அறிவிப்பு..!

Webdunia
புதன், 15 மார்ச் 2023 (18:13 IST)
திருச்சி திமுகவினர் மோதல் சம்பவம் தொடர்பாக நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திருச்சியில் இன்று திருச்சி சிவா மற்றும் கேஎன் நேரு ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர் என்பதும் இரு தரப்பினார் மாறி மாறி காவல் துறையினரிடம் கொடுத்த புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
மேலும் திருச்சி சிவா வீட்டில் உள்ள கார் உள்பட விலை உயர்ந்த பொருள்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் காவல்துறையை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் திருச்சி சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 
 
திமுக நிர்வாகிகள் காஜாமலை விஜய், முத்து செல்வம், துரைராஜ், ராமதாஸ் ஆகிய நான்கு பேரும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக துரைமுருகன் அறிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments