Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரயிலில் இருந்து தவறி விழுந்து 4 மாணவர்கள் பலி - சென்னையில் அதிர்ச்சி

ரயிலில் இருந்து தவறி விழுந்து 4 மாணவர்கள் பலி - சென்னையில் அதிர்ச்சி
, செவ்வாய், 24 ஜூலை 2018 (09:52 IST)
சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் 4 மாணவர்கள் ரயிலில் இருந்து விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் மின்சார ரயில் கம்பி அறுந்து விழுந்ததால் மின்சார ரயில்கள் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் மாற்றி விடப்பட்டது. இதனால் சென்னை பீச் - தாம்பரம் வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
 
இந்நிலையில் சென்னை பீச் ஸ்டேஷனிலிருந்து அதிக பயணிகளுடன் திருமால்பூருக்கு சென்று கொண்டிருந்த ரயில், பரங்கிமலையை நெருங்கிய போது, படிகட்டில் தொங்கிய 4 மாணவர்கள் பக்கவாட்டில் மோதி கீழே விழுந்தனர். அதில் 4 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். பலர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதேபோல் நேற்று பரங்கிமலை ரயில் நிலையத்தில் தடுப்புச் சுவரில் மோதி 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆந்திராவில் முழு அடைப்பு: திருப்பதியில் தமிழக பக்தர்கள் தவிப்பு