Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரக்கோணத்தில் கிணற்றில் குதித்து 4 பள்ளி மாணவிகள் தற்கொலை

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (19:42 IST)
அரக்கோணம் அருகே ராமாபுரத்தை சேர்ந்த 4 பள்ளி மாணவிகள் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



 
அரக்கோணம் அருகே உள்ள ராமாபுரத்தில் உள்ள கிணற்றில் உடல்கள் மிதப்பதாக அந்த பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. கிணற்றில் 4 மாணவிகள் குதித்து தற்கொலை செய்து கொண்டதை அப்பகுதி மக்கள் தீயணைப்பு படை வீரர்களுக்கு தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் மிதந்த 3 மாணவிகளின் உடல்களை மீட்டனர். மேலும் ஒரு மாணவியின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 
 
தற்கொலை செய்து கொண்ட 4 மாணவிகளும் அரசு பள்ளியில் படிப்பவர்கள் என கூறப்பட்டுள்ளது. மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்டது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஆசிரியர்கள் மாணவிகளை திட்டியதாகவும், பள்ளிக்கு பெற்றோர்களை அழைத்து வருமாறு கூறியதாலும் மாணவிகள் தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

குண்டர் சட்டத்தில் சவுக்கு சங்கர்.. சென்னை காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

கள்ளக்காதலனுடன் உல்லாசம்! எட்டி பார்த்த 5 வயது மகளுக்கு தாய் செய்த கொடூரம்!

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்..முன்னுக்கு பின் முரணான தகவல் அளித்தாரா எஸ்.ஆர்.சேகர்?

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் ஜாமீன் ரத்து... சிறார் நீதி வாரியம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments