Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீவிரமடைகிறதா கரும்பூஞ்சை தொற்று; சிவகங்கையில் 4 பேர் அனுமதி!

தீவிரமடைகிறதா கரும்பூஞ்சை தொற்று; சிவகங்கையில் 4 பேர் அனுமதி!
, செவ்வாய், 1 ஜூன் 2021 (11:27 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் கரும்பூஞ்சை தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளன. இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்று தமிழகத்தில் மெல்ல அதிகரித்து வருகிறது.

சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரும்பூஞ்சை தொற்றால் ஒரே நாளில் 4 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கரும்பூஞ்சை தொற்றை தடுக்க தேவையான மருந்தை தமிழக அரசிற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புதுவை பாஜக நிர்வாகிகளுக்கு மேலிடம் முக்கிய உத்தரவு: பெரும் பரபரப்பு!