Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேசின் பிரிட்ஜ்–வியாசர்பாடி ரயில் மேம்பாலத்தில் மழை நீர்: 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து!

Siva
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (19:59 IST)
பேசின் பிரிட்ஜ் மற்றும் வியாசர்பாடி ரயில் நிலையங்களுக்கிடையில் உள்ள ரயில் மேம்பாலத்தில் மழை நீர் அடைத்துள்ளதால், ஈரோடு, திருப்பதி, மைசூரு ஆகிய நகரங்களுக்கு செல்லும் பல விரைவு ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
இந்த தகவல் தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இன்று (அக். 15) மாலை 6.05 மணிக்கு புறப்பட வேண்டிய திருப்பதி – சென்னை சென்ட்ரல் சப்தகிரி எக்ஸ்பிரஸ் (16058) ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 
 
இதுபோல, மாலை 4.35 மணிக்கு புறப்பட இருந்த சென்னை சென்ட்ரல் – திருப்பதி எக்ஸ்பிரஸ் (16203) ரயிலும், இரவு 11 மணிக்கு புறப்பட உள்ள சென்னை சென்ட்ரல் – ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649) ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
 
மேலும், இரவு 9.15 மணிக்கு புறப்பட இருக்க வேண்டிய சென்னை சென்ட்ரல் – மைசூரு காவிரி எக்ஸ்பிரஸ் (16021) ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments