Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு

4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு
, செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (12:21 IST)
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தகவல். 
 
தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதிகமான மாவட்டங்களில் மழை பெய்து வரும் நிலையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் தமிழ்நாட்டில் கடற்கரை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திறந்த வேகத்தில் மூடப்பட்ட பள்ளிகள்: ஆந்திராவில் 9 மாணவர்களுக்கு கொரோனா