Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பரோட்டா சாப்பிட்ட 38 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

Webdunia
செவ்வாய், 4 ஜூலை 2023 (13:36 IST)
நாமக்கல் அருகே உள்ள ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டால் 38 பேர் உடல் நல கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நாமக்கல் அருகே சேந்தமங்கலம் என்ற பகுதியில் உள்ள ஓட்டலில் நேற்று பரோட்டா சாப்பிட்ட 38 பேருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
 
இதனை அடுத்து சுகாதாரத் துறை அதிகாரிகள் அந்த ஓட்டலில் ஆய்வு செய்த நிலையில் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். மேலும் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து உடல்நலம் விசாரித்த நாமக்கல் ஆட்சியர் மக்கள் நல்வாழ்வு துறைக்கு தகவல் தெரிவிக்காமல் சிகிச்சை அளித்ததாக சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உண்மை முகத்தை காட்டுகிறது கர்நாடகா.. வழக்கம்போல் வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு.. ராமதாஸ் கண்டனம்..!

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவது எப்போது? நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் தகவல்..!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டாம்.! உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம்..!!

இறப்பிலும் அரசியல் ஆதாயம் தேடும் இபிஎஸ்.! விழுப்புரம் உயிரிழப்பு கள்ளச் சாராயத்தால் நிகழவில்லை.! அமைச்சர் ரகுபதி மறுப்பு.!!

பாதுகாப்பு தளவாட உற்பத்தியில் இந்தியா சாதனை.! பிரதமர் மோடி பாராட்டு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments