Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்பா மையம் பெயரில் விபசாரம்…60 பெண்கள் உள்பட 99 பேர் கைது

ஸ்பா மையம் பெயரில் விபசாரம்…60 பெண்கள்  உள்பட 99 பேர் கைது
, வியாழன், 25 மே 2023 (15:28 IST)
உத்தரபிரதேச மாநிலத்தில் ஸ்பா மையம் என்ற பெயரில் விபசாரத்தில் ஈடுபட்ட 60 பெண்கள் உள்பட 99 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  இங்குள்ள காசியாபாத் என்ற நகரில் பசிபிக் மால் பகுதியில், ஸ்பா மையங்கள் இயங்கி வருகின்றன.

இந்த ஸ்பா மையங்களில் விபசாரம் நடைபெறுவதாக போலீஸாருக்கு தகவல் சென்றுள்ளது.

இதையடுத்து,  போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டு, ஸ்பா மையங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், 8 ஸ்பா மையங்களில் இருந்து 60 பெண்கள் மற்றும் 38 ஆண்களை பிடித்துச் சென்று அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக துணை காவல் ஆணையாளர் விவேக் தெரிவித்துள்ளார்.

மேலும்,  ‘’ஸ்பா மையங்களின் மேலாளர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக பாலியல் சுரண்டல் தடுப்புச் சட்டம் 1950ன் கீழ் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகத்’’ தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலை மீது முன்னாள் பாஜக நிர்வாகி போலீசில் புகார்! என்ன காரணம்?