Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரொனா உறுதி!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (21:45 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவிய வரும் நிலையில், இத்தொற்றைத் தடுக்க, அனைத்து நாடுகளும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரொனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், பொதுஇடங்களில் முகக்கவசம் அணிந்து செல்லவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அறிவுறுத்தி வருகிறது.

சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரொனா தொற்றுப்பரவல், மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஒன்று ஒரே நாளில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 (ஆண்கள் -22, பெண்கள் -15)  பேராக அதிகரித்துள்ளது.

சென்னை மற்றும் கோவையில் மட்டும் 9 பேர் என மொத்தம் 14 மாவட்டங்களில் இத்தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments