Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று 37 பேருக்கு கொரொனா உறுதி!

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (21:45 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் பரவிய வரும் நிலையில், இத்தொற்றைத் தடுக்க, அனைத்து நாடுகளும் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரொனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும், பொதுஇடங்களில் முகக்கவசம் அணிந்து செல்லவும், தடுப்பூசி போட்டுக்கொள்ளவும் அறிவுறுத்தி வருகிறது.

சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரொனா தொற்றுப்பரவல், மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது.

திருச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஒன்று ஒரே நாளில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 (ஆண்கள் -22, பெண்கள் -15)  பேராக அதிகரித்துள்ளது.

சென்னை மற்றும் கோவையில் மட்டும் 9 பேர் என மொத்தம் 14 மாவட்டங்களில் இத்தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments