Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை !

Webdunia
திங்கள், 13 மார்ச் 2023 (21:30 IST)
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயில் மாசிக் கொடைவிழாவை முன்னிட்டு நாளை கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவங்களுக்கு  மார்ச் 14 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 

கன்னியாகுமரி மாவட்டத்தில் உலகப் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மாசிக் கொடைவிழா நடத்தப்படுவது வழக்கம்.

இந்த  ஆண்டும் மாசிக் கொடைவிழா வரும் மார்ச் 14 ஆம் தேதி( நாளை) நடைபெறவுள்ளது. எனவே, அரசுக் கருவூலங்கள், அத்தியாவசிய பணிகள் தவிர, நாளை அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

எனினும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை தினத்திற்குப் பதில், வரும் மே மாதம்  13 ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments