Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிராவை நோக்கி நான்காவது டெஸ்ட்… நிலைத்து நின்ற ஆஸி பேட்ஸ்மேன்கள்!

டிராவை நோக்கி நான்காவது டெஸ்ட்… நிலைத்து நின்ற ஆஸி பேட்ஸ்மேன்கள்!
, திங்கள், 13 மார்ச் 2023 (14:33 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 571 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி உள்ளது. விராட் கோலி மிகவும் அபாரமாக விளையாடி 186 ரன்கள் அடித்துள்ளார். கடைசி கட்டத்தில் கோலி, இரட்டை சதத்தை மிஸ் செய்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. ஆஸ்திரேலியா அணியை விட 91 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு நாள் ஆட்டம் முடிவடைந்த நிலையில், இன்று ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஆஸி அணியும் நிலைத்து நின்று இந்திய அணி பவுலர்களை திணறடித்து வருகின்றனர். இதுவரை ஆஸி அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 158 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. இன்னும் அரைநாள் மட்டுமே உள்ள நிலையில் போட்டி டிராவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தற்போது களத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷான் ஆகியோர் விளையாடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்: இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி..!