Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேரறிவாளனுக்கு பரோல்: எத்தனை நாள் தெரியுமா?

பேரறிவாளனுக்கு பரோல்: எத்தனை நாள் தெரியுமா?
, வியாழன், 24 செப்டம்பர் 2020 (11:39 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஏழு தமிழர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றியும் இன்னும் அவர்கள் விடுதலையாகவில்லை
 
இந்த நிலையில் சிறையில் இருக்கு எழுவரில் ஒரு சிலர் அவ்வப்போது பரோலில் வெளிவந்து மீண்டும் சிறைக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
பேரறிவாளனை பரோலில் விட அனுமதிக்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த பரோல் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 30 நாள் பரோல் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அவர் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தற்கொலைகளை தடுக்கக்கோரி மனுதாக்கல் செய்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!