Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை கோவில் பூசாரி

Webdunia
ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (16:57 IST)
சென்னையில் 3வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவில் பூசாரி ஒருவரை பொதுமக்கள் அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
சென்னை சூளைமேடு பகுதியில் ஸ்ரீகன்னிகா பரமேஸ்வரி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வரும் உதயகுமார் என்பவர், அந்த கோவில் அருகே விளையாடி கொண்டிருந்த பெண் குழந்தையை கோவிலுக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
 
இதனால் பயந்து போன அந்த குழந்தை அழுது கொண்டே வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த குழந்தையின் பெற்றோர் உடனடியாக உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து சென்று பூசாரி உதயகுமாருக்கு தர்ம அடி கொடுத்தனர். இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் மகளிர் காவல்துறையை சேர்ந்தவர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உதயகுமாரை கைது செய்தனர்
 
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தால் தூக்கு தண்டனை என்ற சட்டம் நிறைவேற்றப்பட்ட அன்றே இந்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்