Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குநர் ஷங்கர் உட்பட 24 பேருக்கு சம்மன் !

Webdunia
செவ்வாய், 17 மார்ச் 2020 (16:55 IST)
இயக்குநர் ஷங்கர் உட்பட 24 பேருக்கு சம்மன் !

சமீபத்தில் ’இந்தியன் 2 ’படத்தின் படப்பிடிப்பில் விபத்து நடந்து மூன்று உயிர்கள் பலியான விவகாரம் குறித்து தன்னை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்தி வருகின்றனர் என்று நடிகர் கமல்ஹாசன் திடுக்கிடும் புகார் ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் அளித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்தியன் 2 பட விபத்து சம்பந்தமாக கமல்ஹாசன் ஆஜராக வேண்டியதில்லை என  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கர் நடிகர்  கமல்  உட்பட 24 பேருக்கு சம்மன்  அனுப்பப்பட்டது.
 
மேலும், விபத்து நிகழ்ந்த இடமான நசரத்பேட்டை பிலிம் சிட்டியில் விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் கமல் ஆஜராக தேவையில்லை என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது கமல் தவிர்த்து இயக்குநர் ஷங்கர் உட்பட  மற்ற 23 பேரிடம் போலீஸார் விசாரணை நடத்தவுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி இருக்கிறது என்பதால் யாரையும் மிரட்டி விடலாமா? திமுகவுக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

தேர்தலில் தோல்வி அடைந்தவுடன் அழக்கூடாது. இந்தியா கூட்டணிக்கு அறிவுரை கூறிய ஒவைசி..!

2000 ஆடு மாடுகளுடன் மதுரையில் மாநாடு நடத்தும் சீமான்.. அனுமதி கிடைக்குமா?

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 13 வயது சிறுவன் பிணமாக மீட்பு.. கிருஷ்ணகிரி அருகே பதட்டம்..!

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 15% பெற்றோர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுமா? முதல்வர் ஆய்வு

அடுத்த கட்டுரையில்
Show comments