Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை என்ன??

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (12:43 IST)
தமிழகத்தில் இதுவரை 24,094 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தமிழகத்தில் 5,622 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,14,507 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.கொரொனா தொற்றால் 65 பேர் உயிரிழந்துள்ளனர். 5,596 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர். மொத்தம் இதுவரை 5,58,534 பேர் குணமடைந்துள்ளனர்.
 
சென்னையில் கொரொனாவால் மட்டும் 1,364 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,71,415 பேராக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆகும். இதுவரை 9,718 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் நேற்று வெளியான சுகாதாரத்துறை அறிக்கையில், ஒரே நாளில் 99 குழந்தைகள் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை 24,094 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments