Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைப்பு- சென்னை மாநகராட்சி

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (14:09 IST)
தமிழகத்தில் மொத்தமாக 2,363 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.நேற்று முன்தினம் கொரோனாவால் 94 பேர்களும் நேற்று 138 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் மட்டும் மொத்தம் 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சென்னை ராயபுரத்தில் மட்டுமே அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தனர். ஆனால் நேற்று ராயபுரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு திருவிக நகர் முதலிடத்தைப் பிடித்துள்ளது

நேற்று மட்டும் திருவிக நகரில் 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு மொத்தம் 210 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நேற்று ராயபுரத்தில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்தம் 199 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

திருவிக நகர், ராயபுரத்தை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதி தேனாம்பேட்டை என்பதும், சென்னையின் முக்கிய பகுதியாக விளங்கும் இங்கு கொரோனாவால் 105 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து கோடம்பாக்கத்தில் 97 பேர்கள், தண்டையார்பேட்டையில் 77 பேர்கள், வளசரவாக்கத்தில் 40 பேர்கள் அம்பத்தூரில் 27 பேர்கள் அடையாறில் 20 பேர்கள் திருவொற்றியூரில் 16 பேர்கள் என கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி சற்றுமுன் அறிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவை மதித்து சமூக விலகலை கடைபிடித்தல் ஆகியவை மட்டுமே கொரோனாவால் இருந்து தப்பிக்க ஒரே வழி என்பதை சென்னை மக்கள் இனிமேலாவது புரிந்து வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.சென்னை  மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து அதிகாரிகள்  சீல் வைத்துள்ளனர். அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 56 பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments