Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை விழா ரத்து: பொலிவிழந்த கொடைக்கானல்!

Webdunia
வெள்ளி, 1 மே 2020 (13:02 IST)
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஆண்டுதோறும் கொடைக்கானலில் நடைபெறும் கோடை விழா ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் மே 3 வரை தளர்வுகளற்ற ஊரடங்கு தொடர்ந்து வருகிறது. இன்று முதல் மே மாதம் தொடங்குவதால் வழக்கமாக இந்த சமயங்கள் கோடை காலத்தையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகமான சுற்றுலா தளங்களுக்கு செல்வர். முக்கியமாக ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடுவர்.

இதனால் கொடைக்கானலில்  ஆண்டுதோறும் மே மாத தொடக்கத்தில் கோடை விழா கொண்டாடப்படும். அதையொட்டி மலர் கண்காட்சி, படகு போட்டி போன்ற பல நிகழ்ச்சிகளும் நடைபெறும். தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதையும், ஊரடங்கையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு கோடை விழா மற்றும் அதன் அனைத்து கொண்டாட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக திண்டுக்கல் ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments