Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவின் மின் தட்டுப்பாடு வராது: மத்திய அமைச்சர் உறுதி!

இந்தியாவின் மின் தட்டுப்பாடு வராது: மத்திய அமைச்சர் உறுதி!
, ஞாயிறு, 10 அக்டோபர் 2021 (14:01 IST)
இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு இருப்பதால் பல மாநிலங்களில் குறிப்பாக வட மாநிலங்களான ராஜஸ்தான் உத்தரபிரதேசம் டெல்லி ஆகிய மாநிலங்களில் மின் தட்டுப்பாடு வரும் என்றும் பல மாநிலங்கள் இருளில் மூழ்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது. 
 
தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு இருப்பதாகவும் அதன் பின்னர் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டால் கண்டிப்பாக தமிழகத்தில் மின்தடை ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் மத்திய மின்சார துறை அமைச்சர் ஆர் கே சிங் அவர்கள் இன்று அளித்த பேட்டியில் நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பு உள்ளது என்றும் அதனால் நாட்டில் எந்த மாநிலத்தில் மின் தட்டுப்பாடு வராது என்றும் நிலக்கரி பற்றாக்குறை என்பது இதுவரை இல்லை என்றும் இனியும் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார் 
 
ஆனால் ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவலின்படி இந்தியாவின் பல மாநிலங்களில் விரைவில் மின் தட்டுப்பாடு வரும் என்று கூறப்படுவதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 மணி நேரத்தில் 10.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி – தமிழகம் சாதனை!