பெங்களூரில் நாளை முதல் 2000 பேருந்துகள் இயங்க அனுமதி!

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (15:55 IST)
தமிழகத்தில் நாளை முதல் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதனையடுத்து இந்த நான்கு மாவட்ட பொது மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் 
 
இந்த நிலையில் பெங்களூரில் நாளை முதல் 2000 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரிலிருந்து முக்கிய இடங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
பெங்களூரு நகர போக்குவரத்து கழக ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என கர்நாடக அரசு அறிவிப்பு செய்துள்ளது. இதனை அடுத்து நாளை முதல் பெங்களூர் நகர இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
பெங்களூர் மட்டுமின்றி மற்ற நகரங்களிலும் படிப்படியாக பேருந்துகளை இயக்க கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு முழுமையாக விலக்கப்பட்டு உள்ளது என்பதும் அங்கு பள்ளிகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனித தலைமுடி ஏற்றுமதியில் ரூ.50 கோடி மோசடி.. சென்னை உள்பட 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை..!

2022ல் இறந்த வாக்காளரின் புகைப்படத்திலும் பிரேசில மாடல் அழகி புகைப்படம்.. அதிர்ச்சி தகவல்..!

எலான் மஸ்கின் சம்பளம் ரூ. 82 லட்சம் கோடி: டெஸ்லா பங்குதாரர்கள் இன்று முடிவு எடுக்கிறார்களா?

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் இன்றிரவு கொட்டப்போகும் மழை: வானிலை எச்சரிக்கை..!

தேர்தல் ஆணையத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக கூட்டணி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments