Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரில் நாளை முதல் 2000 பேருந்துகள் இயங்க அனுமதி!

Webdunia
ஞாயிறு, 20 ஜூன் 2021 (15:55 IST)
தமிழகத்தில் நாளை முதல் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இதனையடுத்து இந்த நான்கு மாவட்ட பொது மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் 
 
இந்த நிலையில் பெங்களூரில் நாளை முதல் 2000 பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரிலிருந்து முக்கிய இடங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
பெங்களூரு நகர போக்குவரத்து கழக ஊழியர்கள் அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயம் என கர்நாடக அரசு அறிவிப்பு செய்துள்ளது. இதனை அடுத்து நாளை முதல் பெங்களூர் நகர இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
பெங்களூர் மட்டுமின்றி மற்ற நகரங்களிலும் படிப்படியாக பேருந்துகளை இயக்க கர்நாடக அரசு முடிவு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தெலுங்கானா மாநிலத்தில் ஊரடங்கு முழுமையாக விலக்கப்பட்டு உள்ளது என்பதும் அங்கு பள்ளிகளும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments