Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 மணி நேரம் மின்வெட்டு: வீட்டை காலி செய்யுங்கள் என மின்வாரிய அதிகாரிகளின் திமிர் பதில்!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (17:08 IST)
திருவாரூர் அருகே 20 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் செய்த நிலையில் வீட்டை காலி செய்துவிட்டு மின்சாரம் இருக்கும் பகுதிக்கு சென்று வாழுங்கள் என மின்வாரிய அதிகாரி திமிராக பதில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருவாரூர் மாவட்டம் வட்டம் என்ற கிராமத்தில் நேற்று 20 மணி நேரம் மின்வெட்டு இருந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வந்தபோது ஒரு கட்டத்தில் வீட்டை காலி செய்துவிட்டு மின்சாரம் இருக்கும் பகுதிக்குச் செல்லுங்கள் என அதிகாரிகள் தெரிவித்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .
 
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மின் இணைப்பு வழங்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி செய்தனர். இதனை அடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதன் காரணமாக சில மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனி அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்கள் வாங்க மாட்டோம்.. இந்தியா அதிரடியால் டிரம்ப் அதிர்ச்சி..!

சென்னை - மும்பை ரயில் மாற்றுப்பாதையில் இயக்கப்படும்: ரயில்வே அறிவிப்பு..!

இன்றிரவு 17 மாவட்டங்களில் கொட்டப்போகுது கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

நடு ரோட்டில் காதலனை காம்பால் விரட்டி விரட்டி அடித்த காதலி: சென்னை கேகே நகரில் பரபரப்பு..!

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதை நிறுத்திவிட்டோம்.. அமேசான். வால்மார்ட் அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments