Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 மணி நேரம் மின்வெட்டு: வீட்டை காலி செய்யுங்கள் என மின்வாரிய அதிகாரிகளின் திமிர் பதில்!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (17:08 IST)
திருவாரூர் அருகே 20 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் சாலை மறியல் செய்த நிலையில் வீட்டை காலி செய்துவிட்டு மின்சாரம் இருக்கும் பகுதிக்கு சென்று வாழுங்கள் என மின்வாரிய அதிகாரி திமிராக பதில் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திருவாரூர் மாவட்டம் வட்டம் என்ற கிராமத்தில் நேற்று 20 மணி நேரம் மின்வெட்டு இருந்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வந்தபோது ஒரு கட்டத்தில் வீட்டை காலி செய்துவிட்டு மின்சாரம் இருக்கும் பகுதிக்குச் செல்லுங்கள் என அதிகாரிகள் தெரிவித்ததாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .
 
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மின் இணைப்பு வழங்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதி செய்தனர். இதனை அடுத்து கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டனர். இதன் காரணமாக சில மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments