Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்று 18 மாவட்டங்களுக்கு மழை - எங்கெங்கு தெரியுமா?

இன்று 18 மாவட்டங்களுக்கு மழை - எங்கெங்கு தெரியுமா?
, திங்கள், 30 மே 2022 (13:04 IST)
தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. 

 
கேரளாவில் முன்கூட்டியே பருவமழை தொடங்கி விட்டதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின்  சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அப்படி என்ன வன்மமோ.. மூதாட்டி கெட்டப்பில் வந்த இளைஞன்! – சேதமான புகழ்மிக்க ஓவியம்!