Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

Siva
வெள்ளி, 24 மே 2024 (21:52 IST)
16 வயது சிறுமி, 14 வயது சிறுவனை காதலித்த நிலையில் காதல் தோல்வி காரணமாக இருவரும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மாதவரம் பால் பண்ணை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி கடந்த ஏழு மாதங்களாக காதலித்து வருவதாக தெரிகிறது. இருவருக்கும் டியூஷன் படிக்கும்போது பழக்கம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னும் இருவரும் காதலித்ததாகவும் கூறப்படும் நிலையில் திடீரென காதலில் பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

 இதனை அடுத்து 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி ஆகிய இருவரும் கைகளில் துப்பட்டாவால் கட்டிக் கொண்டு கடலில் குதித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து திருவொற்றியூர் கடல் பகுதியில் இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் இது குறித்து விசாரணை செய்து செய்யப்பட்டு வருகிறது.

16 வயது சிறுமி மற்றும் 14 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

உலக சாதனைக்காக சிகரம் குழுவினர் நடத்திய ஒயிலாட்டம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments