Webdunia - Bharat's app for daily news and videos

Install App

16 வயது சிறுமியைக் கடத்தி கூட்டுப் பலாத்காரம் – முன்னாள் மற்றும் இன்னாள் காதலன் கைது !

Webdunia
ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (08:03 IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 16 வயது சிறுமியைக் கடத்திச் சென்று காட்டுக்குள் வைத்து கூட்டுப் பலாத்காரம் செய்த 4 இளைஞர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் எனும் நபர். இவர் அதேப் பகுதியைச் சேர்ந்த 6 வயது மைனர் பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு இரு வீட்டிலும் பயங்கர எதிர்ப்பு எழுந்ததால் இருவரும் பிரிந்துள்ளனர்.

இந்நிலையில் கொஞ்ச நாளில் சுரேஷின் நண்பர் ராமலிங்கம் என்பவரைக் காதலிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் காதலர்கள் இருவரும் வேம்பார் ரோடு காட்டுப்பகுதிக்கு செல்ல, சுரேஷ் குமார் அவரது நண்பர்களும் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.  இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி அங்கிருந்து செல்ல வேண்டும் என அழுது ஆர்ப்பாட்டம் செய்துள்ளார்.

அவரை கட்டாயப்படுத்தி நான்கு பேரும் கூட்டுப்பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அந்த சிறுமி மயக்கமடைந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் தண்ணீர் வாங்க சென்றுள்ளனர். அப்பகுதி மக்கள் சந்தேகப்படுத்தி அந்த இளைஞர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் உண்மையை சொல்லியுள்ளனர். இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலிஸார் போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments