Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடையிலும் குளுகுளு மழை இன்று எங்கெங்கு மழை வாய்ப்பு?

Advertiesment
தமிழகம்
, வெள்ளி, 27 மே 2022 (14:03 IST)
வெப்பசலனம் காரணமாக 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 
தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 4ம் தேதி அக்கினி வெயில் தொடங்கிய நிலையில் வெயில் மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வங்க கடலில் உருவான புயல் காரணமாக பெய்த மழையால் வெப்பம் குறைவாகவே இருந்தது.
 
தற்போது 28 ஆம் தேதியுடன் அக்கினி வெயில் முடிவடைய உள்ள நிலையில் ஆங்காங்கே வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதன்படி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், திருச்சி, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என தகவல். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

க்யூட் தேர்வை ஏற்க மறுக்கும் 22 மத்திய பல்கலைக்கழகங்கள் : சிக்கலில் யுஜிசி