Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிப்பதை ஆபாசமாக வீடியோ எடுத்த இளைஞர்கள் – தீக்குளித்த சிறுமி பலி!

Webdunia
புதன், 17 ஜூன் 2020 (13:01 IST)
வேலூர் மாவட்டத்தில் 15 வயது சிறுமி குளிப்பதை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டியதால் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் பாகாயத் என்ற பகுதியை அடுத்துள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது  சிறுமி ஒருவர் தன் வீட்டில் இருந்த மண்ணெண்ணை ஊற்றிக்கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தீவைத்துக் கொண்டார். இதையடுத்து 90 சதவீத காயங்களோடு அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டார். மேலும் அவரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் கூறிய தகவல்கள் அதிர்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளன. வீட்டில் தனியாக அவர் குளித்துக் கொண்டு இருந்த போது பூனைக்கண்ணன் என்கிற ஆகாஷ், பாலாஜி, கணபதி என்கிற தாமஸ் என்பவர்கள், தான் குளிக்கும் போது வீடியோ எடுத்து மிரட்டினர். தன் சித்தப்பாவுடன் ஏற்பட்ட விரோதம் காரணமாக அவரைப் பழிவாங்குவதற்காக இந்த இழிசெயலை அவர்கள் செய்ததாக சொல்லப்படுகிறது.இது சம்மந்தமாக அந்த இளைஞர்களுடன் சண்டைக்கு சென்ற சிறுமியை அவர்கள் தாக்கியுள்ளனர். மேலும் அவர்கள் செல்போனில் இதுபோல பலர் குளிக்கும் வீடியோக்களும் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சிறுமி உயிரிழந்துள்ளார். இதையடுத்து சம்மந்தப்பட்ட மூன்று பேரும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவமானது தமிழகம் எங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments