Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை: சுடுகாட்டில் புதைக்கப்பட்ட நகைகள் மீட்பு!

ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை: சுடுகாட்டில் புதைக்கப்பட்ட நகைகள் மீட்பு!
, திங்கள், 20 டிசம்பர் 2021 (13:02 IST)
வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது. 

 
வேலூர் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடை ஜோஸ் ஆலுக்காஸில் இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்ற பிறகு இரண்டு காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அப்போது ஒரு கும்பல் நகைக்கடையின் பின்புற சுவற்றில் துளையிட்டு முதல் தளத்தில் நுழைந்து அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 
 
இந்நிலையில் வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை கொள்ளை தொடர்பாக 10 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். குச்சிபாளையத்தைச் சேர்ந்த டீக்காராமன் என்வரை கைது செய்து ஏற்கனவே போலீசார் விசாரித்து வரும் நிலையில் தற்போது டீக்காராமன் கூட்டாளிகளான கண்ணன், பிரபு, வசந்த் உட்பட 10 பேரை பிடித்து போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.
 
இந்த விசாரணையில் முடிவில் வேலூர் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்ட 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளது போலீஸார் தெரிவித்துள்ளனர். நகைகள் உருக்கப்பட்டு சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காதலிப்பதாக சொல்லி கூட்டு பாலியல் வன்கொடுமை! – நாமக்கலில் அதிர்ச்சி சம்பவம்!