Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில் 144 தடை உத்தரவா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்

தமிழகத்தில் 144 தடை உத்தரவா? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
, சனி, 21 மார்ச் 2020 (20:01 IST)
கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளுக்கு சமூக ஆர்வலர்கள் முதல் பிரதமர் வரை பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை தமிழக மக்கள் வழங்குகின்றார்களா? என்பது கேள்விக்குறியே 
 
பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்படும் அலுவலகங்கள் வீட்டிலிருந்தே பணி செய்யும்படி கூறியும் பொதுமக்கள் பலர் வீட்டைவிட்டு தேவையில்லாமல் வெளியேறி கொரோனா வைரஸை பரப்ப்பியும், வரவழைத்துக் கொண்டு இருப்பதாக தமிழக அரசு கவலையுடன் தெரிவித்துள்ளது
 
விடுமுறை அளிக்கப்பட்டதை சுற்றுலா செல்வதற்கு என கருதாமல் அனைவரும் வீட்டில் பாதுகாப்புடன் இருக்க வேண்டுமென அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்கனவே கண்டிப்புடன் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகத்தில் 144 தடை உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவ்வாறு பிறப்பித்தால் மட்டுமே பொதுமக்கள் அனைவரும் வீட்டில் இருப்பார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
இந்த நிலையில் ’பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருந்து அரசு சொல்லும் அறிவுரைகளை பின்பற்றி தமிழக அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் 144 தடை உத்தரவு அவசியம் இருக்காது என்று கூறியுள்ளார். இதனை அடுத்து தமிழக மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் 144 தடை உத்தரவு பிறப்பிப்பதை தவிர்க்க முடியாது என்றே அமைச்சரின் பேட்டியில் இருந்து கருத்தில் கொள்ளவேண்டியுள்ளது 
 
ஏற்கனவே அரசின் உத்தரவுகளை மதிக்காமல் நடந்தால் 144 தடை உத்தரவை பிறப்பிக்க தயங்க மாட்டேன் என நமது அண்டை மாநிலமான கேரளா மாநில முதலமைச்சர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மார்ச் 31 ஆம் தேதிவரை புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு !