Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையை காப்பாற்றிய 14 வயது சிறுமி!

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையை காப்பாற்றிய 14 வயது சிறுமி!
, வெள்ளி, 12 நவம்பர் 2021 (14:27 IST)
ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையை காப்பாற்றிய 14 வயது சிறுமி!
ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த தனது தங்கையை 14 வயது சிறுமி ஒருவர் துரிதமாக காப்பாற்றிய நிலையில் அவர்கள் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை என்ற பகுதியின் அருகே ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்தது. இந்த கிணற்றுக்குள் தனது தங்கை விழுந்ததைக் கண்ட 14 வயது தேவிஸ்ரீ என்ற சிறுமி உடனடியாக துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றி உள்ளார் 
 
கிணற்றில் விழுந்த சிறுமியின் தலை முடியை பிடித்துக்கொண்டு தேவிஸ்ரீ சத்தமிட உடனே அருகில் இருந்தவர்கள் அவரௌ மீட்டு உள்ளனர். இதன் பின்னர் அதிகாரிகள் ஆழ்துளை கிணற்றை மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
தனது தங்கையை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து விட்டார் என்பதை அறிந்ததும் உடனடியாக சமயோசிதமாக காப்பாற்றிய 14 வயது சிறுமி தேவிஸ்ரீக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: 19 மாவட்டங்களில் கனமழை!