Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 ரயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் பலி! டிரைவர்கள் கிரிக்கெட் பார்த்ததே காரணம்? – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Prasanth Karthick
ஞாயிறு, 3 மார்ச் 2024 (12:55 IST)
ஆந்திராவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட ரயில் விபத்தில் 14 பேர் பலியான நிலையில் டிரைவர்களின் கவனக்குறைவே விபத்துக்கு காரணம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.



கடந்த ஆண்டு ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டத்தில் ராயகடா பயணிகள் விரைவு ரயில், பலாசா ரயிலின் பின்பகுதியில் மோதியதில் 14 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த கோரமான விபத்து நடந்ததன் காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தற்போது ரயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் பேசியபோது “ஆந்திர மாநிலத்தில் இரு ரயில்கள் மோதிய விபத்து குறித்த விசாரணையில், ராயகடா பயணிகள் ரயிலின் டிரைவர் மற்றும் உதவியாளர் இருவரும் செல்போனில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டு ரயிலை இயக்கியதே விபத்துக்கு காரணம் என தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவருமே அந்த விபத்தில் பலியானார்கள்.

இனி இதுபோன்ற கவனச்சிதறல் நடவடிக்கைகளில் ஓட்டுனர்கள் ஈடுபடாமல் இருக்க இவற்றை கண்காணிக்கும் அமைப்பை லோகோ எஞ்சினுக்குள் நிறுவி வருகிறோம். ரயில்களை இயக்குவதில் முழு கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments