Publish Date: Thu, 04 May 2023 (21:30 IST)
Updated Date: Thu, 04 May 2023 (21:32 IST)
ருவாண்டா நாட்டில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், சிக்கி 13 பேர் பலியாகியுள்ளனர்.
ருவாண்டா நாட்டில் கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் பெய்து வரும் மழையால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்குடன் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், பல குடியிருப்புகள், விளை நிலங்கள், சாலைகள் உள்ளிட்ட பல பகுதிகள் பாதிகப்பட்டுள்ளன. இதை மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகிறது.
இந்த நிலையில், ருவாண்டாவில், மழை, வெள்ளம், மற்றும் நிலச்சரிவில் சிக்கி 136 பேர் உயிரிழந்துள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு மீட்புப் படையினர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், அண்டை நாடான உகாண்டாவிலும் கனமழை பெய்து வருவதால், ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பேர் பலியானதாகியுள்ளதது குறிப்பிடத்தக்கது.