Publish Date: Fri, 12 Feb 2021 (21:39 IST)
Updated Date: Fri, 12 Feb 2021 (21:41 IST)
எந்த உதவி தேவை என்றாலும் உடனடியாக 1100 என்ற எண்ணுக்கு டயல் செய்து சேவை மையத்தைத் தொடர்புகொண்டு உதவி பெறலாம் என்று ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருந்தார்
அந்த வகையில் தமிழக அரசின் உதவியைப் பெறுவதற்காக 1100 என்ற சேவை மையம் நாளை முதல் தொடங்க இருப்பதாகவும் இந்த சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
இந்த சேவை மூலம் அனைத்து துறைகளும் முதல்வர் அலுவலக உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்க உள்ளதாகவும் எந்த ஒரு உதவி குறித்து தகவல் வந்தாலும் உடனடியாக சம்பந்தப்பட்ட துறையினர் அது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் கூறப்படுகிறது
முதல்வரை அல்லது மாவட்ட கலெக்டரை இனிமேல் நேரில் சந்தித்து மனு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் 1100 எண்ணை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை கேட்டால் உடனடியாக அதற்கு பலன் கிடைக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது