Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 9 April 2025
webdunia

அடுத்த 2 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை!!

Advertiesment
தமிழகம்
, வெள்ளி, 26 நவம்பர் 2021 (11:06 IST)
அடுத்த இரண்டு மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் இன்னும் இரண்டு மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், நாமக்கல், கரூர் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
 
மழை காரணமாக தமிழகத்தில் 14 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்றும் 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோடுன்னா அது கேத்ரீனா கைஃப் கன்னம் மாதிரி இருக்கணும்! – ராஜஸ்தான் அமைச்சர் சர்ச்சை பேச்சு!